புது வண்டிகளை ஆசீர்வதிக்கும்
கடவுள் ஒருவர் தோன்றி இருக்கிறார்
எங்கள் ஏரியாவில்.
இரண்டு, மூன்று, நான்கு சக்கர
வாகனங்களை வாங்கியவுடன்
இவரிடம் அழைத்து வருகிறார்கள்.
அவற்றின் மேல் நீர் தெளித்து
சந்தனம், குங்குமம் தடவி
ஆசீர்வதித்து அனுப்புகிறார்.
புறக்கணிக்கப்பட்ட பழைய கடவுளோ
கையில் ஆணியுடன்
பக்கத்து சிக்னலில்
சுற்றிக் கொண்டிருக்கிறார்,
வண்டிகளில் இருந்து காற்று இறக்கி விட.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, October 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
:)
Post a Comment