Tuesday, December 11, 2007

ஒரு இரவுக்கான கூடு

பிள்ளைகளுடன் மேல் பெர்த்துக்குப்
போன அம்மா
சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து
ஊட்டி விட ஆரம்பித்தாள்.
அப்பா குருவி வெளியே போய்
தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தது.
ஒரு இரவுக்கான கூடு
உருவாகியிருந்தது
ரயில் கிளம்புவதற்கு முன்னால்.

(c) veenaapponavan@yahoo.com

2 comments:

அனுஆத்மா said...

நல்ல கவிதை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு. எனக்குப் பிடித்திருக்கிறது.