Saturday, May 31, 2008

இருவேறு

ஒரு மணி நேரத்துக்கு முன்
ரயில் அடித்து இறந்தவன் உடலை
கருப்பு ப்ளாஸ்டிக் கவரால்
முழுவதும் மூடி
ரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர்.
ஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும்
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டான்
பிணத்தின் கால் பக்கம் இருந்தவன்.
இன்னும் கொஞ்ச நேரம் தேடி இருக்கலாம்,
என்ன அவசரம் என்று
கோபித்துக் கொண்டான்
மற்ற இருவரையும்.
புதர் அடியில் கிடக்கும்,
நாளை எடுத்துக் கொள்ளலாம் என்றான் கிழவன்.
ஆனாலும் சமாதானம் ஆகவில்லை
செத்தவனின் செருப்பைத் தேடியவன்.
இறங்கும் போது கவனித்தேன்,
இருவேறு நிறங்களில்
செருப்புகள் அணிந்து இருந்த
அவன் கால்களை.

(c) veenaapponavan@yahoo.com

3 comments:

Madhuri said...

Sad :( ... But my favorite so far!! (Probably because I understood it in first pass :()

M.Saravana Kumar said...

வெவ்வேறு நிற மனிதர்கள் ..

சூர்யா - மும்பை said...

really a good one.