ஒரு மணி நேரத்துக்கு முன்
ரயில் அடித்து இறந்தவன் உடலை
கருப்பு ப்ளாஸ்டிக் கவரால்
முழுவதும் மூடி
ரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர்.
ஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும்
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டான்
பிணத்தின் கால் பக்கம் இருந்தவன்.
இன்னும் கொஞ்ச நேரம் தேடி இருக்கலாம்,
என்ன அவசரம் என்று
கோபித்துக் கொண்டான்
மற்ற இருவரையும்.
புதர் அடியில் கிடக்கும்,
நாளை எடுத்துக் கொள்ளலாம் என்றான் கிழவன்.
ஆனாலும் சமாதானம் ஆகவில்லை
செத்தவனின் செருப்பைத் தேடியவன்.
இறங்கும் போது கவனித்தேன்,
இருவேறு நிறங்களில்
செருப்புகள் அணிந்து இருந்த
அவன் கால்களை.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Sad :( ... But my favorite so far!! (Probably because I understood it in first pass :()
வெவ்வேறு நிற மனிதர்கள் ..
really a good one.
Post a Comment