Friday, September 19, 2008

நடுப் பிள்ளையார்

பிள்ளையார் சதுர்த்தி முடிந்து
கரைப்பதற்காக
கோயில் வாசலில்
வந்து சேர்ந்து கொண்டிருந்தனர்
சின்னதும் பெரியதுமான பிள்ளையார்கள்.
மொத்தம் 25.
ஐந்து ஐந்தாக அவற்றை
சதுர வடிவில் அமைத்தான் சிறுவன்.
எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளில்
நான்கை எடுத்து வந்து
நான்கு மூலைகளிலும் வைத்தான்.
ஒரு எருக்கம்பூ மாலையைப் பிரித்து
ஒவ்வொரு பிள்ளையார் முன்பும்
ஒவ்வொரு பூவாக வைத்தான்.
தள்ளி நின்று பார்த்தான்.
நடுவில் இருக்கும் பிள்ளையாரை
எடுத்து விட்டு
அங்கே இன்னொரு விளக்கை
வைக்கத் தோன்றியது அவனுக்கு.
கவனமாக குனிந்து
நடுப்பிள்ளையாரை பத்திரமாக எடுத்து
மேல் படிக்கட்டில் வைத்தான்.
அவர் மற்ற 24 பிள்ளையார்களை
அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு மட்டும்
இரண்டு பக்கத்திலும் விளக்குகள் அமைத்து
ஒரு முழு மாலையை அணிவித்தான்.
அவர் நிறைவு எய்தினார்.

(c) veenaapponavan@yahoo.com

3 comments:

Saravana Kumar MSK said...

வழக்கம் போல் கலக்கல்..
:)

படிக்க ஆரம்பித்த போதே யூகிக்க முடிந்தது முடிவை..

veenaapponavan said...

Thanks, Saravana Kumar. - mukundhn

சூர்யா - மும்பை said...

நல்ல ஒன்று.


அன்புடன்

சூர்யா.