Monday, October 27, 2008

குழல் 1

ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை.

(c) veenaapponavan@yahoo.com

12 comments:

வடகரை வேலன் said...

நிறையமுறை நானும் இதையே அனுபவித்திருக்கிறேன்.

என் சகோதரன் வாங்கிய புல்லாங்குழலில் இன்னும் அதையே முயற்சிக்கிறான் வரவில்லை, மற்றவைகளை அசல் போல் வாசித்த போதும்.

அக்னி பார்வை said...

அருமை...

த.அரவிந்தன் said...

குழந்தை தேடிய பாடல் உங்கள் கவிதையில் கிடைத்துவிட்டது

Maniz said...

கவிதை ரொம்ப நல்ல இருக்கு!!!!!!!

உங்க கவிதைகள் ஆனந்த விகடன் ல வந்தது. எல்லாமே நல்லா இருந்தது

Saravana Kumar MSK said...

அருமை முகுந்த்.. வெகு அருமை.

Venkatraman said...

'கவிதை'யானவருக்கு என் இனிய வணக்கங்கள்!..

நான் உங்களை எழுத்துக்களை இதுவரை விகடனில் மட்டுமே ரசித்திருக்கிறேன்
இப்பொழுது வலைபூவிலும் பூத்திருப்பதை கண்டு பேரானந்தம் கொண்டேன்..

முகுந்தா.. முகுந்தா.. எனக்கும் கவிதை எழுத வரம்தா.. வரம்தா என கேட்க தோன்றுகிறது!

Anonymous said...

This one is really good...

Thanks

Venkat

Athirai said...

மிக்க நன்று நண்பரே , அருமையான கற்பனை

Rage said...

unggal arputattai paartha pinbu naanum kavithai ezluthanumnu thondruthu.

Shakthiprabha said...

ஒரு சிலவற்றிற்கு மட்டுமே பதிலெழுத வேண்டும் என்று நினைத்தாலும், கட்டை அவிழ்த்து எழுத வைத்துவிடுகிறதே உங்கள் கவிதை!

dhana said...

interesting poetical though.
beleive adults do the same in a different perception.

related comment
i could read the book, not the author.

kartin said...

ஒளிர்கிறீர்கள்
குழல் ஒலிப்பில்..