Saturday, November 08, 2008

உள்ளே வெளியே

குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச சொல்லி
கண்ணாடியை தட்டுகிறான்
சிறுவன்.

(c) veenaapponavan@yahoo.com

8 comments:

Saravana Kumar MSK said...

புரிந்து கொள்ள முடிவதில்லை வாழ்கையை..

அகமது சுபைர் said...

சிறைப்பட்டது விடுதலைவேண்டி...
வெளியில் இருப்பதும் சிறையில்

Rage said...

ninaippathellam ellorukkum kidaippatillaiyea.......nalle kavithai!

Shakthiprabha said...

விலங்குகள் எங்கெங்கும்
சிலது கண்களுக்கு புலப்படும்

athimathura said...

v.nice mukunth

Reuter McGill said...

கவிதைகள் மிகவும் சோகம். பின்னூட்டங்கள் ஒரே காமெடி.

kartin said...

கிள்ளும் அழகு!!

D.R.Ashok said...

பட்டாம்பூச்சி
சிறுவன் - இருவர் நிலையும் ஒன்றாக உருவகிக்கிறார்.

சரியா முகுந் (சார்)