சரிதா எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு
வந்து கொண்டிருந்தன
அந்த வட்டாரத்தில்
இடி விழுந்து பழுதான டிவிக்கள்.
கடை முன்னால் கூட்டமாக நின்று
மரணவீடு போல
மெதுவாக விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
மழை மறுபடியும் ஆரம்பித்தது.
கடைக்காரன்
இரவு விடிய விடிய
கடையை மூடாமல்
ஈயத்தை உருக்கி மின் இணைப்புகளை
சரி செய்து கொண்டிருந்தான்.
விடியும் நேரம்
ஒரு இடி இடிக்க ஆரம்பித்தது.
ஒரு துளி ஈயத்தை எடுத்து
அந்த இடியின் கடைவாயில்
லாவகமாக வைத்தான்.
இடி பாதியில் நின்றது.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரொம்ப புடிச்சிருக்கு இந்த கவிதை.. அழகு..
புரில சார்
Post a Comment