Saturday, November 22, 2008

சற்றே

மஞ்சள் விளக்கு
சிகப்பாவதற்கு முன்
பிணம் சாலையைக் கடந்து விட்டது.
பின்னால் வந்தவர்கள்
தயங்கிய நொடியில்
குறுக்கே வண்டிகள்
ஓட ஆரம்பித்து விட்டன.
மீண்டும் பச்சை வரும்வரை
சவ ஊர்வலத்தின் சோகம்
சற்றே குறைந்தது
போல தோன்றியது
பஸ்ஸின் ஜன்னல் வழியாக
வேடிக்கை பார்த்தவனுக்கு.

(c) veenaapponavan@yahoo.com

5 comments:

Saravana Kumar MSK said...

ம்ம்ம்.. ரொம்ப நல்லா observe பண்றீங்க..

Anonymous said...

on that time what u doing???????? bus payeni neenggethana!!!!!!!!

Shakthiprabha said...

wowwww ! :clap:

I am sure we can think of atleast 3 to 4 dimensions which is BEAUTIFULLY LEFT UNSAID.

SIMPLY ROCKING.

சேரல் said...

ரசித்தேன்!

-ப்ரியமுடன்
சேரல்

D.R.Ashok said...

பினம் கடக்கும்
மனம் கடக்குமா?

மனம் கடக்கும்
சவம் கடக்குமா?


(நாலு வரியிலயும் பெரிய தத்துவமே இருக்கு சார்)

(ரொம்ப நேரமா உங்க சைட்ல இருந்துட்டேன் ஹிஹிஹி)