எழுந்திருக்கும் போது
சில சமயம்
எதிர்பார்க்காத இடங்களில்
சுவர்களும், கதவுகளும்,அறைகளும்
தோன்றி மறைகின்றன.
எந்த இடத்தில் தூங்கினால்
குழப்பம் குறையும் என்று
கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.
சொந்த ஊரில்
நான் பிறந்து வளர்ந்த
வீட்டின் வரைபடத்தை வைத்து
அதன் மேல்
இப்போது தனியாக தங்கி இருக்கும்
வீட்டின் வரைபடத்தை வைத்து
வெட்டுப் புள்ளிகளை குறித்துக் கொண்டேன்.
இரண்டு வீடுகளிலும்
எந்த அறையில்,
தலையை எந்தப் பக்கம் வைத்து
தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்தேன்.
சுவர்களில் முட்டிக் கொள்வது
கொஞ்சம் குறைந்தது.
போன வாரம் ஊருக்குப் போனபோது
தூங்குவதற்கு முன்
அறையின் சுவர்களுக்கும் உடலுக்குமான
கோணம் எவ்வளவு என்று கவனிக்கவில்லை.
நடு இரவில், சமையலறையில்
தீர்மானம் இல்லாமல்
சுற்றிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து
அம்மா பயப்பட்டாள்.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, November 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Try a forest? The smell of the trees and the bushes will steer you automatically to safety before your brain wakes up...
Brilliant and poignant!! I love this one!!
thanks. i will send u the chocolate cake in courier :D
ரொம்ப ரொம்ப அழகா அருமையா இருக்கு இந்த கவிதை.. :)
Eththanai naalaa irukku thookkaththula nadakkara viyathi? :)
Brilliant!
Post a Comment