Saturday, November 22, 2008

ஓரிரு

சனிக்கிழமை காலை உணவு
வாங்கப் போனபோது
நான்கு விரல்களைக் காட்டி
தோசையையும் சுட்டிக் காட்டி
சைகையிலேயே
பார்சல் பண்ண சொல்லி
எடுத்துக் கொண்டு வந்தேன்.
வார இறுதி நாட்களில்
இவனிடம் மட்டும்தானே பேசுவோம்
என்ற சந்தேகம் எழுந்தது.
ஓரிரு நிமிடங்களில் அதை
சரிபார்த்துக் கொண்டு விட்டேன்.

(c) veenaapponavan@yahoo.com

2 comments:

Saravana Kumar MSK said...

கலக்கல்.. அருமை..

Shakthiprabha said...

சில நேரங்களில் உயிரற்றதும் கூட பேசும். சாட்சி சொல்லும் :)