Sunday, May 24, 2009

கைப்பிடி கனவு

மடித்து வைத்துத் தூங்கிய
கைகளின் அழுத்தம்
தோளில் குழந்தையைச் சுமந்த
கனவாக வெளிப்பட,
புரண்டு படுத்தவள்
அறைத்தோழியை
கொஞ்சிச் சிரிக்கிறாள்.

(c) veenaapponavan@yahoo.com

8 comments:

arun said...

முகுந்த் நாகராஜன் தமிழில் எப்போதும் பரவலாக விரும்பப்படும் இளம்கவிஞர். நவீனத்துத்துக்குப் பிந்தைய கவிதை என்று சொல்லத்தக்கவை அவரது கவிதைகள். தத்துவச் சுமையோ, படிமத்தொழில்நுட்பமோ, தனிமனித மன அவசரமோ , அதீத மொழி இறுக்கமோ இல்லாத எளிமையான நேரடியான கவிதைகள் அவை.

இன்று உலகமெங்கும் நவீனக் கவிதையின் முக்கியமான கூறாக மாறியிருக்கும் ‘நுண்சித்தரிப்பு’ தான் அவரது கவிதைகளின் சிறப்பு. முகுந்த் நாகராஜன் சகமனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு துளியை தன் கவித்துவச் சட்டகத்துக்குள் பிடித்துவிடுகிறார். பெரும்பாலும் குழந்தைகளின் உலகம். அந்த நுண்சித்தரிப்பு தன் ஆழ்பிரதி வழியாக வாழ்க்கையின் நுட்பமான தளங்களை, வாழ்க்கை வழியாக ஓடிச்செல்லும் ஆழ்ந்த அர்த்தங்களை நமக்குக் காட்டுவதாக உள்ளது.

இத்தகைய கவிதை ஒரு குறிப்பிட்ட வகையான மொழி-வடிவப் பயிற்சியால் அடையப்படுவது அல்ல. வாழ்க்கையின் கரையில் கூர்ந்த நுண்ணுணர்வுடன் சதா காத்திருத்தல் ஒன்றையே கவிஞன் செய்ய வேண்டியிருக்கிறது. எதிராபாராத கணத்தில் ஒரு தருணம் திறந்துகொண்டு கவிதையைக் காட்டிக் கொடுக்கிறது, அவ்வளவுதான்.

முகுந்த் நாகராஜனின் பிரகாசமான உலகம் பிரியங்களின் மர்மங்களும் உறவுகளின் புதிரான ஆழங்களும் வாழ்க்கை என்னும் தற்செயல்பிரவாகத்தின் பேரர்த்தங்களும் நிரம்பியது. குறிப்பாக சிறுமிகள் மேல் அவரது தந்தைமை நிரம்பிய மனம் கவியும் விதம் தமிழ்க் கவிதையின் அழகிய நிகழ்வுகளில் ஒன்று-http://jeyamohan.in/?p=1975-

அன்பு முகுந்த் நாகராஜன் அவர்களுக்கு உங்கள் "தோளில் குழந்தை" என்ற கவிதையை
படித்த பின்னர் எழுந்த சந்தோஷத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் உங்களை பற்றி எழுதிய பத்தியை (க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்**http://jeyamohan.in/?p=1975**) திரும்பவும் படித்து பார்த்தேன்
அவரை விட வார்த்தையை வைத்துக்கொண்டு நான் உங்களை பற்றி என்ன சொல்லிவிட முடியும். வாழ்த்துக்கள்!!!!!
***அன்பன் அருண் ***

கென்., said...

இந்த கவிதை வெகு அருமை முகுந்த்.

:))))))))))))

D.R.Ashok said...

அதி நுட்பம்... பாசாங்கு இல்லாத பெண்னிய பார்வை... hats off you..

Gowripriya said...

அருமையான கவிதை.. மிகவும் ரசித்தேன்

kartin said...

Qte depiction!!

athimathura said...

அருமையான கவிதை.. மிகவும் ரசித்தேன்

athimathura said...

அருமையான கவிதை.. மிகவும் ரசித்தேன்

Poopoova said...

enakku onnume velankalai